Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 13 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 13

லேடி ஜிமிங் – பட்டத்து இளவரசனின் துணைவி. பேரரசியின் காதலனின் சகோதரி.

ஜாங் சிஜெங் – டைரக்டர் சிஜெங் என்றும் லார்ட் சிஜெங் என்றும் அழைக்கப்படும் இவன்  புகழ்பெற்ற ‘படைப்பு வழிகாட்டி’ (Creation Manual) என்னும் நூல்-ஐ எழுதியவன். 

ஹே சியாவோ – ஷியூலி இராணுவத்தின் தலைவன். ராணுவம் அழிக்கப்பட்ட போது, யான் தேசத்தின் மறைவிடத்தில் கைதியாக இருப்பவன். 

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் பாதுகாப்பில் இருக்கிறாள். 

.

Rebirth அத்தியாயம் 13 – சுருக்கம்

சிறு வயதில் ஜான் ஜியு-ம், அவனின் சகோதரி ஜான் ஜிமிங்-ம் [ லேடி ஜிமிங் ] தங்கள் கண் முன்னே தங்களின் பெற்றோர் உட்பட மொத்த கிராமமும் அழிக்கப்பட்டதைக் காண்கின்றனர். இப்போது அரண்மனையில் பேரரசிக்கு அருகிலும், பட்டத்து இளவரசனின் அருகிலும் இருந்து அதற்கு பழிவாங்க சமயம் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

பியான்டாங் அரசின் ரகசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள புகழ்பெற்ற ‘படைப்பு வழிகாட்டி’ (Creation Manual) என்னும் நூல் உலோகம், மரம், நீர், நெருப்பு மற்றும் நிலம் என ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது; இது உலோகவியல் மற்றும் நகரப் பாதுகாப்பு முதல் நிலவியல் அமைப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. நள்ளிரவில் டைரக்டர் சிஜெங் என்றும் லார்ட் சிஜெங் என்றும் அழைக்கப்படும் ஜாங் சிஜெங்-ஐ சந்தித்து அந்த நூலை வாங்க முயற்சி செய்கின்றனர். வருங்கால மன்னன் என்ற முறையில், இளவரசன் லீ சே அந்தக் கையேட்டைக் கடன் வாங்க முயற்சிக்கிறான். அப்போது ஜான் சிஜெங்-ன் மழுப்பலான பதில்களால் அந்த நபர் ஒரு போலி என்பதையும், பேரரசியால் அமைக்கப்பட்ட ஒரு பொறியில் தாங்கள் சிக்கிக்கொண்டதையும் ஜுக்கே யூ விரைவாக உணர்ந்துகொள்கிறான்.

ஆபத்தை உணர்ந்து அவர்கள் அங்கிருந்து வெளியேற முயலும்போது, ​​அந்த மாளிகையின் முன் வெளியே, பேரரசியின் காதலன் ஜான் ஜியூ அப்பகுதியைச் சுற்றிப் பெரும் படைபலத்தைக் குவித்திருப்பதோடு, ஊடுருவியவர்களை உயிருடன் பிடிக்கவும் தன் வீரர்களுக்கு உத்தரவிடுகிறான். ரகசிய காரியம் என்பதால், பட்டத்து இளவரசரை அதிகாரப்பூர்வமாக எல்லோருக்கும் முன்பாக அடையாளம் காட்ட இயலாது என்பதால், ஜுக்கே யூ, இளவரசன் லீ சே-வின் முகத்தை துணியால் மறைத்து அங்கிருந்து தப்பிச்செல்ல முயலும் போது, சிங் வந்து அவர்கள் இருவரையும் கைவிடப்பட்ட வெள்ளக் கட்டுப்பாட்டு கால்வாய் வழியாக அழைத்துச் செல்கிறாள். சிங் மற்றும் லீ சே பாதுகாப்பாக இனி சென்றுவிடுவார்கள் என்று தெரிந்தபிறகு, ஜுக்கே உண்மையான படைப்புக் கையேட்டை மீட்க, திரும்பவும் அதே வழியில் ரகசிய அரசாங்க நூலகத்துக்கே செல்கிறான். 

சென்று அந்த நூலையும் எடுத்துக்கொண்டு மீண்டும் சிங், லீ சே இருக்கும் இடத்திற்கே திரும்ப வர, காத்திருந்த அவர்கள் ஜுக்கே வை அழைத்துக்கொண்டு வெளியேறிச் செல்கிறார்கள். அங்கும் நகர காவல் வீரர்கள் அவர்களை மிகத் தீவிரமாக தேட, அங்கிருந்து அவரவர் இருப்பிடத்திற்கு திரும்புகிறார்கள். இந்த இரவுப் பயணங்களில் இடையிடையே சிங் மற்றும் ஜுக்கே இருவருமே சில நேரங்களில் அருகருகே இருக்கும் சூழல் வர, மனமும் கண்களும் அதை விரும்பினாலும் மனம் திறவா சூழல் காரணமாக வேறுபட்டே நிற்கின்றனர். தன் இருப்பிடம் திரும்பும் வழியில் ஜுக்கே வின் உடலில் உள்ள குளிர் விஷம் மீண்டும் தீவிரம் அடைந்து, ரத்தம் சிந்தி சுருண்டு விழ, லிங்யூ ராணியால் காப்பாற்றப்படுகிறான்.

ஜான் ஜியு வெறும் கையுடன் திரும்பியதைக் கண்டு பேரரசி கடும் சீற்றமடைகிறாள். லீ சே முகமூடி அணிந்திருந்ததால், பட்டத்து இளவரசனைப் பார்த்ததாக எந்த வீரனாலும் சாட்சியம் அளிக்க முடியவில்லை. இதனால், தேசத்துரோகத்திற்கான எந்த ஆதாரமும் பேரரசியிடம் இல்லாமல் போனது. கோபம் கொண்ட பேரரசி, அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு திரும்பி வந்த வீரர்களை தண்டிக்க உத்தரவிடுகிறாள். ஜிமிங் பட்டத்து இளவரசனின் குழந்தைக்குத் தாயாக கருவுற்று இருப்பதைக் கூறி தேற்ற, பேரரசி ஜிமிங்கின் கர்ப்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக, அவளை இளவரசனின் மாளிகையில் இருந்து மாற்றும்படி உத்தரவிடுகிறாள். மாளிகைக்குத் திரும்பி வந்த லீ சே ஜிமிங்-ன் துரோகத்தை அறிந்து வருத்தம் கொள்கிறான். தன்னைச் சுற்றி ஒற்றர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும் என்றாலும் அதில் ஜிமிங்-ம் ஒருத்தியாக இருப்பதை நம்பமுடியால் கோபம் கொண்டு அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எரித்துவிடும்படி உத்தரவிடுகிறான். 

வழிகாட்டி நூல் கிடைத்து விட்டதாலும், குளிர் விஷயத்திற்காக ஜுக்கே யூ எடுத்துக்கொண்ட நஞ்சு முறிவிற்கான காலக்கெடு ஏற்கனவே கடந்துவிட்டதாலும், உடனடியாக சிமெங்-கிற்குத் திரும்பலாமென்று அரசி அவனை வற்புறுத்துகிறாள். அந்த நூலில் முக்கிய பகுதி கிழிக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டி, ஜுக்கே பேரம் பேசுகிறான். ஷியூலி இராணுவத்தின் தலைவனான ஹி சியோ-வை சிங் காப்பாற்ற உதவுவதில் ஜுக்கே உறுதியாக இருப்பதால், மேலும் இருபது நாட்களுக்கு இங்கேயே தங்கியிருக்க ராணி தனக்கு உதவினால் மட்டுமே தான் கிழிக்கப்பட்ட பக்கங்களுடன் சிமெங்-கிற்குத் திரும்புவதாக அவன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறான். 

யான் தேசத்தில் , யோங் பேரரசுடன் கைதிகள் பரிமாற்றத்திற்கு யான் சூன் உத்தரவு இடுகிறான். வெறும் சில கைதிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக யான் தேச வீரர்களின் உயிரைப் பணயம் வைப்பதாகக் கூறி, இம்முடிவை மேல்நிலை படைத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள். சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஹே சியாவோ-வும் ஒருவன் என்பதை அறிந்த யான் சூன், அவனை தூண்டிலாக பயன்படுத்தி, சிங்-ஐ யான் தேசத்திற்கு வரவழைக்க எண்ணுகிறான். 

அதனால் அவர்களை அலட்சியப்படுத்தி வெளியேறுகிறான். யான் சூன் மனவருத்தத்தில் இருப்பதால் யான் சூன்-ன் ராணி அவனை வெளியே உலாவ அழைத்துச் செல்ல, ராணியிடம் திருமணத்திற்கு முன்னரே போட்ட ஒப்பந்தப்படி, அங்கு குதிரை லாயத்தில் ஒரு பணியாளராகப் பணியாற்றி வரும் முன்னாள் தளபதி செங் யுவானை யான் சூன் சந்திக்கிறான். தளபதி செங்-ன் பேச்சுத்திறமையாலும், முன்பே தளபதியின் இருப்பை யான் சூன் உணர ஆரம்பித்துவிட்டதாலும், அவனை மீண்டும் தளபதியாக நியமிக்கிறார் யான் சூன். 

தான் யோங் தேசத்தின் மதிப்பில்லாத இளவரசி என்ற விவரம் இளவரசன் லீயான்-குத் தெரிந்து விட்டதை உணர்ந்த இளவரசி ஜாவோ சுன்’எர், அதை தன்னிடம் இருந்து மறைத்த இளவரசன் மீது கோபம் கொள்ள, அவன் சமாதானம் செய்கிறான். மனதைத் தெளிவுபடுத்திக்கொள்ள கடைவீதிக்கு வந்திருந்த ஜாவோ சுன்’எரின், பதக்கத்தை திருடன் பறித்துச் செல்ல, பட்டத்து இளவரசனின் மாளிகையில் இளவரசி ஃபூ என்ற மாற்று பெயரில் தங்கியிருக்கும் சிங், திருடனை வழிமறித்து அதனை மீட்டுத் தருகிறாள். ஜாவோ சுன்’எர் தன் முகத்தை மறைக்கும் வகையில் தொப்பி அணிந்திருந்தபோதிலும், சிங்-ஐ  அவள் உடனடியாக அடையாளம் கண்டுகொள்கிறாள். அவளை அங்கு பார்த்தாலும், அவள் இங்கு மாற்று பெயரில் தங்கியிருப்பது தெரிந்தாலும், ஒரு உறுதியான முடிவிற்கு வருகிறாள். இளவரசன் லீயான் தன்னை உண்மையாகக் காதலித்தால், அவன் தன்னை மணந்து லூவோவின் இளவரசியாக ஆக்க வேண்டும் என்று அவள் அவனிடம் கூறுகிறாள்.

சிங் தனது ஒற்றர்கள் மூலம் ஹே சியாவோ பற்றி விசாரிக்கும் போது, அங்கு ஜுக்கே வருகிறான். அவன் முகமூடி இன்றி வந்ததால் சிங்-ன் வீரர்களுக்கு அவன் அடையாளம் தெரியவில்லை. இன்னும் பத்து நாட்களில் பைச்சுவானுக்கு அருகிலுள்ள லின் நகரில் கைதிகள் பரிமாற்றம் நடக்கவிருக்கிறது என்றும், அதில் உறுதியாக ஹே சியாவோ பெயர் உள்ளது என்றும் கூறி, யான் சூன்-ன் உள்நோக்கத்தையும் யூகித்து, சிங்-கிற்காகவே இந்த பரிமாற்றம் இருக்கலாம் என்பதையும் தெரிவிக்கிறான். ஜுக்கே விற்கு நன்றி கூறிய சிங், இனி தான் பார்த்துக்கொள்வதாக கூற, மறுத்து அங்கு செல்வதற்கான தடைகளைக் கூறுகிறான். பட்டத்து இளவரசர் லீ சே உடன் வரும் ஒரு சிமெங் தூதுக்குழுவினர் என்ற போர்வையில் பயணம் செய்தால், விரைவில் செல்லலாம் என்று கூற, சியூலி இராணுவத்துடனான தனது கடைசி இனிப்பான அந்த மனிதனைக் காப்பாற்றுவதற்கான ஆபத்தான பயணத்தைத் தொடங்கத் தயாராகி, சிங் ஒப்புக்கொள்கிறாள்.

யான் சூன் ராணுவத்தில் கைதிகள் பரிமாற்றத்திற்கான செயல்பாடுகள் நடக்க, ஹே சியாவோ குறித்த செய்தி யான் சூன் படைத்தளபதி செங்-கிற்கு தெரியவருகிறது.

.

அத்தியாயம் 12 – இன் சுருக்கம்

அத்தியாயம் 14 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top