Secret Garden / சீக்ரெட் கார்டன் – எபிசோட் 2 விளக்கம் தமிழில் – Drama Lookup

.

Dramas > Korean Dramas > Secret Garden > episode – 2

கிம் ஜூ-வோன் – பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பணத்திமிரும், ஆணவமும் கொண்ட புத்திசாலி . தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடம்பரமான ராயல் டிபார்ட்மென்ட் ஸ்டோரை நடத்துகிறான். [ நாம் இவனது பெயரை ஜோவன் என்று அழைப்போம் ]

ஓஸ்கா – ஆசியா முழுவதும் பிரபலமான பாடகர். ஆனால் இவனுக்கு இசைத் திறமை இல்லை. பாடகராக இருப்பவனுக்கு இசைத் திறமை முக்கியமாக கருதப்படுவதால் இசைக் கலைஞரைத் தேடிக்கொண்டு இருப்பவன். பெண்களிடம் இதமாக பேசி மயக்கும் தன்மை கொண்ட காசினோவா. ஜோவனின் உறவினன். சியோல்-ன் முன்னாள் காதலன்.

கில் ரா-இம் – ஒரு சண்டைப் பயிற்சிப் பள்ளியில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றுகிறாள். படங்களில் சண்டைக்காட்சிகளில் டூப்-ஆகவும் வேலை செய்கிறாள். அவள் கடினமாக உழைக்கிறாள், எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருப்பதை விரும்புவதில்லை.

இம் ஜாங்-சூ – சண்டைப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளன். கில் ரா-இம் க்கு சீனியர். அவளை ஒரு தலையாகக் காதலிப்பவன்.

சியோல் – ஓஸ்காவின் முன்னாள் காதலி. இப்போது ஜோவனின் திருமணத்திற்கு பார்க்கப்படும் பணக்கார பெண். [ இரண்டாவது கதாநாயகி ]

சே-ரின் – கிளாரா பணிபுரியும் படத்தின் கதாநாயகி. ஓஸ்காவின் பெண் தோழிகளில் ஒருத்தி.

சீக்ரெட் கார்டன் எபிசோட் 2 விளக்கம்

சாலையோரம் மூவரும் [ ஜோவன், ஓஸகா மற்றும் ரா இம் ] நின்று கொண்டிருக்கும்போது, தான் அவசரமாக ஜோவனைப் பார்க்கத்தான் வந்தோம் என்பதை மறந்து விட்டு, ரா இம்-யிடம் பேசத் தொடங்குகிறான் ஓஸ்கா.  அவனது இயல்பு படி அவளைப் பற்றிய விவரங்கள் அவன் முன்னரே நினைவில் வைத்திருக்கிறான். எனவே அவளின் பெயரையும், அவள் செய்யும் வேலையும் குறிப்பிட்டு அவளிடம் பாராட்டி பேசுகிறான். தான் ரசிகையாக இருக்கும் தன்னுடைய விருப்பத்திற்குரியவன் தன்னிடம் தன் பெயரை நினைவு வைத்துச் சொன்னதைக் கேட்டதும் ரா இம் உருகிப் போகிறாள். இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த ஜோவனால் தன் சிறு எரிச்சலை மறைக்க முடியவில்லை. ஓஸ்கா அவளின் கை காயத்தை உணர்ந்து அதைப் பற்றி பேச்சு எடுக்கும் போது, ஓஸ்காவின் கையைத் தட்டி விட்டு அவன் பேச்சை தடுத்து பேசுபவனை கூட கண்டு கொள்ளாமல், ஓஸ்கா மீண்டும் பேச தொடங்க, ரா இம் கூச்சம் கொள்கிறாள். இறுதியில் வேறுவழி இன்றி ஜோவன் நடிகையான அவனது முன்னாள் காதலியுடன் வரவிருக்கும் சர்ச்சையை ஒரு தூண்டிலாகக் காட்டி ஓஸ்காவைத் திசை திருப்பி, அவனை அங்கிருந்து அனுப்புகிறான். பின்னர் கிளாராவிடம் திரும்ப பேசத் தொடங்கும் போது, அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் பேருந்தில் ஏறிவிடுகிறாள்.

ஓஸ்காவின் பாடல்களைக் கேட்டபடி வீடு திரும்பும் வழியெல்லாம் ரா இம் பரவசமடைகிறாள். வீட்டிற்கு வந்து, தன் அறைத் தோழியிடம் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, ஓஸ்கா தன்னை ஒரு ஸ்டண்ட்வுமனாக பார்க்காமல் பெண்ணாக உணர்ந்து பேசியதும், தன்னை ‘கூல்’ என்று அழைத்ததும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகத்  கூறுகிறாள். அவன் பெண்களின் பின்னால் சுற்றுபவன் என்று அவனைப் பற்றி அவள் அறை தோழி எச்சரிக்கை செய்தாலும் கூட, அவன் தனது விருப்பத்திற்குரிய கனவு மட்டுமே என்றும் தன் வாழ்க்கை குறித்த தெளிவு தனக்கு இருக்கிறது என்றும் கூறுகிறாள் ரா இம். 

நடிகையான அவனது முன்னாள் காதலி ஓஸ்காவை மிரட்டும் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த, ஓஸ்கா ஜோவனை அவன் வீடு வரை பின்தொடர்கிறான். இதைத் தந்திரமாகப் பயன்படுத்தி, டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒப்பந்தத்தில் ஓஸ்காவின் கையெழுத்தைப் பெற்றிவிடுகிறான்ஜோவன் . இதன் காரணமாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்-ல் வரிசையில் நின்று கத்திக்கொண்டிருந்த ரசிகர்களின் கூட்டத்திற்குள் ஓஸ்கா ஆட்டோகிராஃப் போடுவதற்காக மாறவேண்டிய நிலை வருகிறது. தான் விரும்பியது கிடைத்துவிட்டதால் ஜோவன் புன்னகைத்தாலும், ஓஸ்காவின் தனிப்பட்ட வேதனையை அவன் மிகவும் ரசிக்கவே செய்கிறான். [ ஜோவனும், ஓஸ்காவும் முட்டிக்கொள்ளும் உறவினர்கள். ]

ஜோவன் மீண்டும் தனது மாலின் [ டிபார்ட்மென்ட் ஸ்டோர் ] நிர்வாகப் பணியாளர்களின் தலைவருடன் விவாதத்தில் மோதும் நிலை வருகின்றது.  அவரை அந்த வேலையிலிருந்து நீக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று அவனது உதவியாளிடம் கூறுகிறான். [ அந்த வழி “நான் அம்மாவிடம் போட்டுக் கொடுக்கப் போகிறேன்.”]

மாலில் தன் கார் வர காத்திருக்கும் போது, ​​ஜோவன் தனக்கு அருகில் ரா இம் நிற்பதாகக் கற்பனை செய்கிறான். அவனுக்கு தன் மனதில் ரா இம் நெருடலை வரவழைத்துவிட்டதாக இது காட்டுகிறது. வேறு இடத்தில் சியோல், ஓஸ்காவின் புதிய இசை வீடியோவிற்கு இயக்குநராக வருவதற்கு பேச்சுவார்த்தையில் இருக்கிறாள். ஓஸ்கா-வின் மேலாளருக்கு சியோல் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அதனால் ஓஸ்காவும், அவளும் இணைந்து பணிபுரிய தயக்கம் கொள்கிறான். அவள் ஜோவனை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், எப்படியும் தான் விரைவில் அவர்களின் குடும்பத்தில் சேர இருக்கும் என்றும், எனவே ஓஸ்கா-வின் நினைவில் அவனது முதல் காதலாக தான் இருக்க இனி விரும்பவில்லை என்றும் ஒஸ்காவின் மேலாளரிடம் கூறுகிறாள்.

 

வீட்டிற்கு திரும்பியதும் ஜோவன் மற்றொரு பெண் பார்க்கும் நிகழ்விற்கு அரை மனதுடன் ஒப்புக்கொள்கிறான். ஆனால் அதே சமயத்தில் தான் நடந்து கொண்டிருக்கும் பொழுதோ, இல்லை அன்றாட வேலைகளை செய்யும் பொழுதோ, ஏன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதோ கூட தன் நினைவுகளில் ரா இம் இருந்து கொண்டே இருப்பதாக அவன் உணர்கிறான். இது அவனை எரிச்சல் அடைய வைக்கிறது. முக்கியமாக தன் நினைவுகளில் அவள் வரும் பொழுது ஒரே மாதிரியான அந்த ரத்தம் பட்ட உடையுடன் இருப்பது இன்னும் அதிக எரிச்சல் கொள்ள வைக்கிறது. அதனால் தன் மனசாட்சியுடன் பேசுவது போல எதிரில் அவள் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அவளிடம் பேசத் தொடங்குகிறான். அவள் ஒரே மாதிரியான ஆண் தன்மை கொண்ட உடைகளை அணிந்திருப்பதை பற்றியும், அவள் தனது எதிர்கால எண்ணத்திற்கு தகுந்தவள் அல்ல என்றும் கூற, இப்பொழுது அவளின் பிம்பம் மாறுகிறது. திடீரென்று மிக நேர்த்தியாக பணக்கார உடைய அணிந்து அவள் மேஜையின் மீது தோன்ற அவன் திகைத்துப் போகிறான். இரு வேறு மனநிலை அவனுக்குள் எழுகிறது. அவனின் பணம் தான் எல்லாம் என்ற மனம் எழுப்பும் கேள்விகள் அனைத்திற்கும் அவளை விரும்பத் தொடங்கி இன்னொரு மனம் பதிலை அளிக்க, அவள் தனக்கு தன் தரத்திற்கு சற்றும் பொருத்தமானவள் இல்லை என்று தனக்குத்தானே வலியுறுத்தி அவளின் நினைவுகளில் இருந்து விடுபட முயற்சிக்கிறான் ஜோவன்.

இறுதியாக அவளிடம் பேசிவிட எண்ணி, ரா இம்-ன் தொலைபேசி எண்னை ஓஸ்கா-விடம் கேட்கிறான்.  ஆனால் அவனிடம் இல்லை என்பதால் அதற்கு பதிலாக சே-ரின் எண்னைப் பெற்று, அவளிடம் இருந்து ரா இம்-ன்  தொலைபேசி எண்னை வாங்குவதற்காக அவளை சந்திக்கிறான். முதலில் ஜோவன் தன்னிடம் பேசவே வந்திருக்கிறான் என்று சே-ரின் சந்தோஷபடுகிறாள்.  ஆனால் அவனது நோக்கம் தெரிந்த பின் அவளுக்கு லேசான எரிச்சல் எழுகிறது. அந்த நிலையில் அவன் ஒரு வாய்ப்பை அவளுக்கு அளிக்கிறான். அதாவது இந்த உதவியை சே-ரின் அவனுக்கு செய்தால், சினி உலகத்தில் ஓஸ்கா போன்ற யாரிடம் என்றாலும் அவள் பேசுவதற்கு ஒரு முறை உதவி செய்வதாக கூறுகிறான். இது இருவரை பொருத்தவரை ஒரு சிறு வியாபார ஒப்பந்தம் ஆகும். ரா இம்-மிடம் பொறாமை இருந்தாலும் தனக்கு பணக்காரனின் தயவு என்றும் தேவை என்பதை நினைவில் கொண்டு, அவனுக்கு சே-ரின் ரா இம்-ன் தொலைபேசி எண்னைத் தருகிறாள்.

அவளின் தொலைபேசி எண்னை வாங்கியதும், சிறு தயக்கத்துடன் பிறகு ரா இம்-ஐ அழைத்து அவளை சந்திக்க கேட்க, அவள் அவனை முற்றிலும் புறக்கணித்து விட்டு இணைப்பைத் துண்டித்து விடுகிறாள். மிகவும் பணம் படைத்த செலவச் சீமானாகிய அவனுக்கு தான் நினைத்தது நடக்காமல் போவது பழக்கம் இல்லாத ஒன்று என்பது போல அவனது எரிச்சல் நமக்கு உணர்த்துகிறது.

ஜோவன் அவளை சந்திக்க ரா இம்-னின் சண்டை பயிற்சி பள்ளிக்கு நேரில் செல்ல முடிவு செய்கிறான். அங்கு அன்று திறந்த நிலை தேர்வு நடைபெறுகிறது. அவன் அவளை சந்திக்க அனுமதி கேட்க, அவர்கள் மற்ற தேர்வர்கள் நிற்கும் வரிசையில் நிற்க வைத்து விடுகிறார்கள். வேறு வழியில்லாமல் தூரத்திலிருந்து அவன் அவள் சிரிப்பதையும், அவள் புன்னகைப்பதையும் காண்கிறான். அவனை பார்க்க பார்க்க அவள் மேலும் மேலும் அவனைக் கவர்வதாகவே அவனுக்கு தோன்றுகிறது. வரிசையில் காத்திருந்து அவன் அவள் முன் தோன்றியதும், அவள் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்து அவனை பார்க்கிறாள். அவன் தான் இங்கு தேர்வுக்காக வரவில்லை என்றும், அவள் தன் அழைப்புகளை ஏற்காததால் அவளை பார்த்து பேசவே வந்திருப்பதாகவும் கூறுகிறான். அவன் அங்கு வரிசையில் வந்திருப்பதால் அங்கிருந்த தேவர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் அவன் எதில் சிறந்தவன் என்பது போன்ற நேர்காணல் கேள்விகளை கேட்க, அதற்கு ஜோவன் தான் நன்றாக பணம் சம்பாதிக்க தெரிந்தவன் என்றும், அதை நன்றாக செலவழிக்கவும் செய்பவன் என்றும், திமிராகவும் நம்பிக்கையுடனும் கூறுகிறான். அது அங்கிருப்பவர்களுக்கு அவன் பணக்காரனாக நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருப்பதாகவே உணர்த்த, நன்றாக நடிப்பதாக பாராட்டுகிறார்கள். மற்றவர்கள் அவனின் பதிலால் ஈர்க்கப்பட்டு அவனை உற்சாகப்படுத்தினாலும், அவளும் அவளது சீனியர் ஜாங் சூ-ம்  ‘என்ன இது’ என்பது போலவே பார்க்கிறார்கள்.

இது குறித்து தனிமையில் ரா இம் தனது சீனியருக்கு ஜோவன் தனக்கு உதவி செய்ததையும், பிறகு நடந்ததையும் விளக்குகிறாள். தான் வேலை செய்யும் இடத்தில் இவ்வாறு அவன் வந்து நடந்து கொள்வது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அந்த எரிச்சலில் அவனை தனியே அழைத்துச் சென்று,  பலவிதமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறாள். இறுதியில் அவன் இங்கு வந்த காரணத்தை கேட்க, அவன் தனக்கும் அது குழப்பமாகவே இருக்கிறது என்று கூறுகிறான். பின்னர் யோசித்து அவளுக்கு முன்னர் தான் செய்த மருத்துவ சிகிச்சைக்கான செலவு பற்றி குறிப்பிட, அவள் கோபம் கொள்கிறாள். அவனை நோக்கிய அவளுடைய எதிர்வினைகளைக் கவனித்த ஜோவன் அவள் கோபமாக இருக்கும் பொழுது, இன்னும் அழகாக இருப்பதாக எண்ணுகிறான். அதையே ரா இம்-மிடமும் கூறுகிறான். பின்னர் திடீரென்று அவளுடைய கை காயம் குறித்து கேள்வி எழுப்ப, அவள் பதிலளிக்க்கவில்லை. அதனால் அவளுடைய காயத்தைப் பார்ப்பதற்காக வலுக்கட்டாயமாக அவளுடைய தோள்பட்டை மேலாடையை சிறிது விலக்கி அந்த தழும்பை உற்றுப் பார்த்தபடியே, அவள் கையை அங்கேயே பிடித்திருக்கிறான். அவளால் அதைத் தடுக்க முயற்சித்தும் இயலவில்லை.

அந்த நேரத்தில் ஜோவனிடம் இருந்து ஏதோ ஒன்றால் அவள் ஈர்க்கப்படுகிறாள். ஒரே நேரத்தில் விசித்திரமாக… இரண்டு விதமான உணர்வுகள். ஒன்று அவன் அத்துமீறி தன்னிடம் நடப்பதாக… இன்னொன்று யாருமே தன்னிடம் நடந்து கொள்ளாத விதத்தில் மென்மையாகவும் இனிமையாகவும் தன்னிடம் நடப்பதாக… ஒரு கணம் அவர்கள் இருவரும் அப்படியே உறைந்து நிற்கிறார்கள். பின்னர் அவன் அவளின் மேலாடை மீண்டும் அணிவித்து விட்டு, அந்த மருத்துவமனைக்கு திரும்பச் சென்று அந்த காயம் நிரந்தர தழும்பாக மாறிவிடாமல் இருக்க சிகிச்சை மேற்கொள்ள கூறுகிறான். மேலும் அப்போது தன்னையும் அழைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறான்.

ஜோவன் பெண் பார்க்கும் நிகழ்வின் மற்றொரு சந்திப்பிற்காக அதே அருங்காட்சியகத்திற்குச் செல்கிறான். ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது பெண்ணும் தான் முன்பு பார்த்து நிராகரித்த அதே பெண் தான் என்று. ஆம் அவனின் முன்பு சியோல் தான் நின்றுகொண்டிருந்தாள். அவளை அவன் முதல் முறையே தெளிவாக நிராகரித்திருந்தான். சியோல் அவனிடம், தான் ஏற்கெனவே முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிட்டதாகக் கூறுகிறாள். அவளிடம் பேசி பயனில்லை என்று எண்ணியவன் அவளிடம் அமைதியாக அதே நேரம் கடினமாக சில வார்த்தைகளைக் கூறி மறுத்துவிட்டு, சென்றுவிடுகிறான். 

சியோல் அங்கிருந்து வெளியே செல்லும் வழியில், ஓஸ்கா-வைச் எதிகொள்கிறாள். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ஓஸ்கா உள்ளுக்குள் அதிர்ந்து போகிறான். சில வருடங்களுக்கு முன்னால் அவளை உண்மையாக விரும்பியவன் என்பதால் இப்போது அவளைக் கண்டவுடன் தானாக கண்கள் கலங்குகிறது. ஆனால் சியோல் அவனிடம் எந்த உணர்வையும் காட்டாமல் சாதாரணமாக அவனிடம் பேசிவிட்டு, அவனைக் கடந்து வெளியேறுகிறாள். அவள் வெளியேறிவிட்டால் என்ற எண்ணத்தில் அவனிடம் வந்த ரசிகையிடம் வழக்கம் போல அவன் பேச, அதை மறைந்து இருந்து கேட்ட சியோல்-ன் கண்கள் இப்போது கலங்கி விட, தன்னைத்தானே சமாளித்துக்கொள்கிறாள். 

தனது அழகான எஸ்டேட்டின் ஏரிக்கரையில், ஜோவன் தான் தேடும் பெண் எப்படிப்பட்டவள் என்று தன் அம்மாவிடம் தொலைபேசியில் கூறுகிறான். தன் அம்மாவிடம் தான் எதிர்காலத்தில் தன் தாய்க்கும் தன் மனைவிக்கும் ஒரு நல்ல மனிதனாக இருக்கவே விரும்புவதாக கூறிய ஜோவன், அவள் நிச்சயமாக அழகாக இருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டு, தனது இலட்சிய பெண்ணிற்கான குணாதிசியங்களைப் பற்றி தாயிடம் கூறத் தொடங்குகிறான். குட்டையான முடி, அதிகம் சிரிக்காதவள்… [ என்று சொல்லத் தொடங்கும் பொழுதே அவனுக்கு தன்னையும் மீறி அவன் நினைவில் எப்பொழுதும் போல ரா இம் வந்து விடுகிறாள். எனவே தொடர்ந்து அவனது அடுத்த வார்த்தை ] சோகமான கண்கள், மிஸ் கொரியா-வாக ஆக விடாமல் தடுக்கும் ஒரு தழும்பு.. என்று இவ்வாறு சொல்லும் பொழுதே அவனுக்குத்தான் ரா இம்-ஐத் தான் விவரித்துக் கொண்டிருக்கிறோம் என்று புரியத் தொடங்குகிறது. அந்தப் பக்கம் இருந்து அவனது தாய் அவனுக்கு பைத்தியமா என்று கேட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறாள். தான் தன் தாயின் விருப்பப்படி கேளாவிட்டால், தனக்கு சொத்து வந்து சேராது என்ற எண்ணத்தில் அவனுக்கு கோபம் வர, அந்த கோபத்தை தன் அருகில் இருக்கும் கற்பனை பிம்பத்திடம் காட்டி கத்த தொடங்குகிறான். இந்த முறை எப்போதும் போல ரா இம் அமைதியாக இருக்காமல் பதிலுக்கு திரும்ப கற்று தொடங்க, தனக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடித்து இருக்கிறதா என்று அவன் யோசிக்க தொடங்குகிறான். அதனால் அவளை தன் மனதில் இருந்து அகற்ற மீண்டும் வலுவாக முயற்சிக்க தொடங்குகிறான்.  அதாவது அர்த்தமே இல்லாத வரிகளைக் கொண்டு சத்தமாக கவிதை போல சொல்லத் தொடங்குகிறான்.

இங்கு சண்டை பயிற்சி பள்ளியில், ஜோவனைப் பற்றிய எண்ணங்களை ரா இம்-ஆல் தவிர்க்க முடியவில்லை. அவனைப் பற்றியே சிந்திக்க தொடங்குகிறாள். இதனால் பயிற்சியின் போது அவளின் கவனம் சிதறி, சொதப்பி விடுகிறாள். இது அவளது சீனியர் ஜாங் சூ-வுக்கு கோபத்தை வரவழைக்கிறது. இது சண்டை பயிற்சியாகையால் அவளது கவனக்குறைவினால் அவளுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற கோபத்தில் அவளை வரவிருக்கும் திரைப்பட படப்பிடிப்பிலிருந்து நீக்கி விடுகிறான். இதனால் அவளை சமாதானம் படுத்த வந்த அவளது சக பணியாளன், அவளிடம் ஜோவனுக்கு அவளை மிகவும் பிடித்திருப்பதை தான் உணர்வதாக கூறுகிறான். அவள் மறுக்கும் போதே ரா இம் எதிர்பாராத விதமாக அவன் அவளது போனை வாங்கி அதிலிருந்து ஜோவனுக்கு அழைப்பும் விடுத்து விடுகிறான்.

அங்கு ஜோவன் நிர்வாக கூட்டத்தில் இருக்கும் பொழுது, சில நாட்களுக்கு முன்பு தனது விஐபி ஹோட்டலில் ரா இம்-க்கும், சியோல்-க்கும் நடந்த பிரச்சனை அவன் கவனத்திற்கு வருகிறது. அதில் பாதிக்கப்பட்டது ரா இம் என்று அறியாதவன், வழக்கம் போல தனது ஹோட்டலுக்கு எழுந்து அவமரியாதை என்று நினைப்பில் அந்த ஹோட்டலில் பணிபுரியும் ரா இம்-ன் தோழியை வேலையில் இருந்து நீக்க உத்தரவிடுகிறான். அப்போது அவன் தொலைபேசி சப்தமிட அதை எடுத்தவன் அழைத்தது ரா இம் என்று உணர்ந்ததால் அவனுக்கு சந்தேகம் வருகிறது. தொலைபேசி அழைப்பு உண்மையா அல்லது தான் எப்பொழுதும் போல கற்பனை செய்கிறோமா என்று…

சந்தேகத்துடனேயே ஜோவன் போனை எடுக்க வேறு வழியில்லாமல் ரா இம் பேச தொடங்குகிறாள்.  அவன் அன்று பயிற்சி பள்ளியின் ஆடிஷன் தேர்ந்தெடுப்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது அவளுக்கு அப்போது நினைவு வர, அவனிடம் அவள் அந்த பயிற்சி பள்ளியின் சீனியராக பேசத் தொடங்குகிறாள். வெற்றி பெற்றும் அவன் என்னும் பயிற்சிக்கு வராததால் பயிற்சிக்கு வரச் சொல்லி கோபமாக பேசி இணைப்பை துண்டித்து விடுகிறாள். இது அவனை தனது மீட்டிங்கில் நடுவிலேயே குழப்பத்துடன் பார்த்தபடி அமரச் செய்கிறது. பின்னர் அவன் ஒரு முடிவுக்கு வந்து தனது யோசனையை [ ஆணை!] அவர்களிடம் கூறுகிறான். அதாவது நிறைய ஸ்டண்டுகள் உள்ள ஆக்ஷன் நாடகங்கள் மற்றும் திரைப் படங்களுக்கு தங்கள் மால் [ டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ] ஸ்பான்சர் செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கிறான்.

ஜோவன் அங்கிருந்து புறப்பட்டு சண்டை பயிற்சி பள்ளிக்கு காரில் செல்கிறான். ஆனால் ரா இம் அங்கிருந்து கிளம்பி செல்வதை பார்த்து அவளை பின்தொடர்கிறான். அவர்கள் ஒரு மயான மண்டபத்தை அடைகிறார்கள். அங்கு ரா இம் அந்தப் புதியவர்களை சண்டைப் பயிற்சிப் பள்ளியின் முன்னாள் இயக்குநருக்கு மரியாதை செலுத்த அழைத்து வந்திருக்கிறாள். அழைத்து வந்த புதியவர்களிடம் அவர்கள் பணி பற்றி எடுத்துரைக்கிறாள். தாங்கள் திரைக்குப் பின்னால் இருப்பதால் என்றுமே பாராட்ட படாதவர்களாக இருப்பதாகவும், சண்டை கலைஞர்கள் என்பதால் மற்றவர்களை பிரகாசிக்க வைப்பதே அவர்களின் வேலை என்றும் அவர்களுக்கு நினைவூட்டுகிறாள். தங்கள் உயிரை பணயம் வைக்க விரும்பும் ஒரு வேலை தான் இது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர்களுக்கு கூறுகிறாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜோவன் அவளால் இன்னும் அதிகமாக ஈர்க்கப்படுகிறான்.

ரா இம் பயிற்சியாளர்களை கால்பந்து மற்றும் கைப்பந்து கலந்த ஒரு விளையாட்டுக்காக வெளியே அழைத்துச் செல்கிறாள். அப்போது ஜோவன் தனது ரசனையான பார்வையுடன் ரா இம்-ஐப் பார்த்துக்கொண்டே வருகிறான். அவனின் நடவடிக்கையால் சிறு எரிச்சலுற்ற ரா இம் தன்னை வெல்லுமாறு சவால் விட, ஜோவன் ஒத்துக்கொண்டு விளையாட வருகிறான். ஆனால் பரிதாபமாக மிக மோசமான விடையாடி, தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்கிறான். மீண்டும் ஆக்‌ஷன் பள்ளிக்குத் திரும்பியதும், அவள் அவர்களை அன்றைய கடைசிப் பயிற்சி பற்றி கூறி, அவன் மீதும் கண் வைத்திருக்குமாறும் கூறிவிட்டு, அங்கிருந்து செல்கிறாள். 

பின்னர் அவள் குடித்துவிட்டு வரும் பொழுது, உடற்பயிற்சி கூடத்தில் அவன் மட்டும் தனியாக இருப்பதை காண்கிறாள். தன்னை மயக்குவதற்கே அவள் குளித்து விட்டு வந்திருப்பதாக அவன் கூற, ஜோவனின் காலில் ஒரு வேகமான உதை விழுகிறது. அவன் விடாப்படியாக அவளைப் பின் தொடர்ந்து சென்று, தான் மன சிக்கலில் இருப்பதாகவும் அந்த பிரச்சனையில் இருந்து தான் குணமடைய வேண்டும் என்றால் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவளிடம் கூறுகிறான். அவள் அவனை பைத்தியக்காரன் என்று அழைத்தாலும், அவனது கேள்விகள் என்ன என்பதில் கவனம் செலுத்துகிறாள். அவன் அவளிடம் இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறான். ஒன்று அவள் அவனுக்கு தெரிந்த மிகப் பிரபலமான கல்லூரியில் படித்தவளா என்பது, இரண்டாவது அவளுடைய பெற்றோர்கள் அவனுக்கு தெரிந்தவர்களா அல்லது பணம் பதவி என்று பின் புலம் உள்ளவர்களா என்பது. அவனது கேள்வி விசித்திரமாகவும், அவளுக்கு கோபத்தை வரவழைப்பதாகவும் இருந்ததால் அவனை அடித்து கீழே சாய்க்கிறாள். இரண்டு முறை அடி வாங்கியவன், மூன்றாம் முறை அந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை கீழே தள்ளி அவளின் மேல் விழுகிறான். அவள் கோபத்தில் விடுபட முயற்சிக்க, அவனும் அவள் மேல் இருந்தபடியே தனது எளிய கேள்விகளுக்கு அவள் ஏன் பதில் அளிக்கவில்லை என்று கேட்பதில் கவனம் செலுத்துகிறான். அதே நேரத்தில் ரா இம்-ன் அறை தோழி ஒரு பெண்ணை திட்டிக் கொண்டே உள்ளே நுழைகிறாள்.

அது அவர்கள் இருவருக்கும் ஒரு சங்கடமான சூழலை உருவாக்க, விரைந்து எழுந்து நிற்கிறார்கள். [ ஹாஹாஹா….அவர்களை பார்த்த தோழியின் அடுத்த கேள்வி இது… ‘அடுத்தது ரொமான்ஸ் மூவியா’] ரா இம் மறுத்து, தோழியிடம் திட்டி கொண்டு வந்த பெண்ணை பற்றி விவரம் கேட்க, அவள் கோபத்தில் கடகடவென்று புலம்பத்துவங்குகிறாள். அன்று ஒரு நாள் விஐபி ஹோட்டல் ஓய்வறையில் அவளுக்கு நடந்த சம்பவம் குறித்து கூறிவிட்டு அந்த பணக்கார பெண் சியோல் மேலிடத்தில் புகார் அளித்ததால் அவள் இப்பொழுது வேலையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறுகிறாள். இடையில் தான் தன் அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்த தன் ஹோட்டல் சீருடையைத் தரையில் போட்டுவிட்டு தன் மோசமான முதலாளி பற்றி புலம்புகிறாள். அவனை தான் பழி வாங்க போவதாகவும், சமூக இணையதளத்தில் சென்று தன் நிறுவனத்தின் தலைவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று பதிவிடப் போவதாகவும் தெரிவிக்கிறாள். அவள் புலம்பலிலிருந்தும், அவள் சீருடையில் இருந்தும், அவள் தன்னை பற்றி தான் பேசுகிறாள் என்பது ஜோவனுக்குத் தெரிய வருகிறது.

எனவே ஜோவன் அவளை தனியாக அழைத்து, அவள் கூறிய அந்த முட்டாள் முதலாளி தான் தான் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, அவளை வேலையிலும் திரும்ப அமர்த்துகிறான். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பிறகு அவன் எதிர்பார்த்தபடி அந்த நேரம் அங்கு வந்த ரா இம்-மிடம் தனக்கு திரும்ப வேலை கிடைத்து விட்டதாகவும், தன் முதலாளி மிக நல்லவன் என்றும், அவன் நான் கூறியபடி ஓரினச்சேர்க்கையாளன் இல்லை என்றும் அவளுக்கு எடுத்துக் கூறுகிறாள். [ அதனைக் கூறி முடிப்பதற்குள் அவள் உளறிய உளறல்…ஹாஹாஹா…]  பின்னர் மேலும் அவளை ஒரு உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறாள், கூட ஜோவனும் செல்கிறான்.

அங்கு அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் ஜோவனுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அது பணக்கார வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள கலாச்சார வேறுபாடாகவும் இருக்கலாம். பின்னர் அவன் அவர்களை இறக்கி விட வர, ரா இம்-ன் வசிக்கும் அந்த சிறிய பாழடைந்த கட்டடத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இந்த மாதிரி ஒரு இடத்தில் வசிப்பவளைத் தன் மனம் நாடுவதை உணர்ந்து தான் ஒரு பைத்தியக்காரன் தான் என்று தனக்கு தானே முடிவு செய்து கொள்கிறான். அதே எண்ணத்தில் அவன் நேராக ஓஸ்கா-வின் இருப்பிடத்திற்கு சென்று வாடகைக்கு வசிக்கும் பெண்ணுடன் அவன் பழகி இருக்கிறானா என்று கேட்கிறான். ஓஸ்கா அதை புரிந்து கொள்ளாமல் வேறொரு அர்த்தத்தில் பேச இருவருக்கும் இடையே சிறு குழப்பமான வாக்குவாதம் ஏற்படுகிறது.

ஜோவன் தன்னிடம் பேசியதன் காரணமாக சே-ரின் சண்டை பயிற்சியை இயக்குனரிடம் தன் விருப்பத்தை தெரிவிக்க, மறுநாள் சே-ரின்-னின் படப்பிடிப்பில் ரா இம் மீண்டும் வேலைக்கு சேர்கிறாள். அங்கு படப்பிடிப்பு தளத்தில் ரா இம்-மிடம் வந்த சே-ரின் தான் தான் அவளை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்ததாக கூறிவிட்டு, அவளுக்கு எப்படி ஜோவனை தெரியும் என்று கேள்வி கேட்கிறாள். ஆனால் உண்மையில் ரா இம்-க்கு ஜோவன் யார் என்றே தெரியவில்லை, அவனது பேர் கூட தெரியவில்லை. பின்னர் அவள் கயிறு இல்லாமல் மேலிருந்து கீழே குதிக்கும் ஒரு பெரிய ஸ்டண்ட் ஜம்ப் காட்சியில் கதாநாயகிக்கு டுப்பாக நடிக்கிறாள். இயக்குனர் அவளை மீண்டும் மீண்டும் மேலிருந்து குதிக்க வைத்து அந்த காட்சியை எடுக்க, அவளுக்கு உடல் வலித்தாலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கீழ்படிகிறாள். அவள் காட்சியில் சரியாக நடிக்காமல் சொதப்புவதாக கூறி படத்தின் இயக்குனர் அவளிடம் கத்த, அவள் வலியுடன் நின்று கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்திற்கு அந்த மாலின் தலைமை அதிகாரி வருவதாக படத்தின் இயக்குனருக்கு செய்து வருகிறது.

சிறிது நேரத்தில் அங்கு வந்த ஜோவன் நேராக ரா இம்-ஐ நோக்கி நடந்து வர, அவளின் கண்கள் வியப்பால் விரிகின்றன. அவன் யாரென்றும், அவனது பின்புலம் என்ன என்பதும் இப்பொழுதுதான் அவளுக்கு புரிய ஆரம்பிக்கிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் இயக்குனர் புகுந்து அவனை புகழ்ந்து பேச ஆரம்பிக்க, இப்போது ஜோவன் இயக்குனரிடம் ரா இம்-மிடம் கத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு கூறிவிட்டு, தன்னைப் பொறுத்தவரை எல்லோரையும் விட இவள் தான் மிகப்பெரிய நட்சத்திரம் என்றும், தான் இவளின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அந்த மக்கள் கூட்டம் முன்னிலையில் பிரகடனப்படுத்துகிறான். 

சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 1

சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 3

.

Tags,

korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 2 explain in tamil, Secret Garden korean drama tamil dubbed, korean dramas in tamil dubbed,   

.

Leave a Comment

Scroll to Top